‘தி பிரைடு ஆஃப் பாரத் : சத்ரபதி சிவாஜி மகாராஜ்’ திரைப்பட கேரக்டர் அப்டேட் 

‘தி பிரைடு ஆஃப் பாரத் : சத்ரபதி சிவாஜி மகாராஜ்’ திரைப்பட கேரக்டர் அப்டேட் 

 

‘தி பிரைடு ஆஃப் பாரத் : சத்ரபதி சிவாஜி மகாராஜ்’ திரைப்பட கேரக்டர் அப்டேட்

 

உலகத் தரம் வாய்ந்த தொழில்நுட்பக் கலைஞர்களிலிருந்து சக்திவாய்ந்த நடிகர்கள் வரை, ‘தி பிரைடு ஆஃப் பாரத்: சத்ரபதி சிவாஜி மகாராஜ்’ படத்தில் பெலவாடி மல்லம்மாவாக இணைந்தார் பூமி சதீஷ் பெட்னேக்கர்*

 

தி பிரைடு ஆஃப் பாரத்: சத்ரபதி சிவாஜி மகாராஜ் திரைப்படத்தின் நட்சத்திர பட்டியல் தொடர்ந்து விரிவடைந்து வருகிறது. இந்திய சினிமாவின் மிகப் பிரம்மாண்டமான வரலாற்றுத் திரைப்படங்களில் ஒன்றாக உருவாகி வரும் இந்தப் படத்தில், பாராட்டப்பட்ட நடிகர்களிலிருந்து உலகளவில் அங்கீகாரம் பெற்ற தொழில்நுட்பக் கலைஞர்கள் வரை பலர் தொடர்ந்து இணைந்து வருகின்றனர்..

 

இந்த சக்திவாய்ந்த நட்சத்திர அணியில் தற்போது நடிகை பூமி சதீஷ் பெட்னேக்கர் அதிகாரப்பூர்வமாக இணைந்துள்ளார்..

 

இந்த பிரம்மாண்டமான படைப்பில், அச்சமற்ற வீர ராணியாகவும், தனது துணிச்சல் மற்றும் அசைக்க முடியாத மன உறுதியால் நினைவுகூரப்படும் பெலவாடி மல்லம்மா என்ற கதாபாத்திரத்தில் அவர் நடிக்கிறார்..

அவரது வருகை, புகழ்பெற்ற வீர மன்னர் சத்ரபதி சிவாஜி மகாராஜாக ரிஷப் ஷெட்டி முன்னணி கதாபாத்திரத்தில் நடிக்கும் இந்த நட்சத்திர அணியை மேலும் வலுப்படுத்துகிறது. மேலும் அர்ஜுன் ராம்பால், விவேக் ஓபராய் மற்றும் பல முன்னணி நடிகர்களும் இதில் இடம் பெற்றுள்ளனர்..

 

இந்தப் படத்தில் இணைந்திருப்பது குறித்து தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்திய பூமி சதீஷ் பெட்னேக்கர் கூறியதாவது…

“மகத்தான மராத்தா வீர மன்னர் சத்ரபதி சிவாஜி மகாராஜின் வாழ்க்கை மற்றும் பாரம்பரியத்தை மையமாகக் கொண்டு, இதுபோன்ற அளவில் உருவாகும் முதல் இந்திய திரை பிரம்மாண்டத்தின் ஒரு பகுதியாக இருப்பது எனக்கு மிகுந்த பெருமையாக உள்ளது..

கர்நாடகத்தின் வீர ராணியான பெலவாடி மல்லம்மா கதாபாத்திரத்தில் நடித்து, அவரை திரையில் உயிர்ப்பிப்பது எனக்கு ஒரு பெரும் பாக்கியம். நான் காந்தாரா திரைப்படத்தின் மிகப்பெரிய ரசிகை. அதில் ரிஷப் ஷெட்டியின் அசத்தலான நடிப்பு என்னை மிகவும் கவர்ந்தது. அதனால், சந்தீப் இந்தக் கதையை என்னிடம் கூறிய தருணத்திலேயே என்னுள் இருக்கும் நடிகை உடனடியாக ‘ஆம்’ என்று கூறிவிட்டது.

 

இதற்கு முன் நான் செய்த எந்தக் கதாபாத்திரத்தையும் போல இல்லாத ஒரு அனுபவம் இது. என்னை முற்றிலும் புதிய கோணத்தில் பார்த்து இந்த வாய்ப்பை வழங்கிய தயாரிப்பாளர்களுக்கு நான் மனமார்ந்த நன்றியைத் தெரிவிக்கிறேன்.”

 

சந்தீப் சிங் இயக்கி தயாரிக்கும் தி பிரைடு ஆஃப் பாரத்: சத்ரபதி சிவாஜி மகாராஜ் திரைப்படம் மிகப் பிரம்மாண்டமான அளவில் உருவாக்கப்பட்டு வருகிறது. புகழ்பெற்ற மராத்தா வீர மன்னரின் வாழ்க்கையை மையமாகக் கொண்டு உருவாகும் மிகப் பெரிய திரை பிரம்மாண்டங்களில் ஒன்றாக இது உருவாக்கப்பட உள்ளது.

இரண்டு பாகங்களாகத் திட்டமிடப்பட்டுள்ள இந்தத் திரைப்படத்திற்கு ரிஷி விர்மானி திரைக்கதை எழுதியுள்ளார். அமித் திரிவேதி இசையமைக்க, தேசிய விருது பெற்ற பாடலாசிரியர் பிரசூன் ஜோஷி பாடல் வரிகளை எழுதியுள்ளார்.

 

தொடர்ந்து விரிவடைந்து வரும் முன்னணி நடிகர்கள் மற்றும் உலகளவில் அங்கீகாரம் பெற்ற தொழில்நுட்பக் கலைஞர்களின் அணியுடன் உருவாகும் இந்த பிரம்மாண்ட திரைப்படம், இந்த ஆண்டு இறுதியில் படப்பிடிப்பைத் தொடங்க உள்ளது. இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க படைப்பை உயிர்ப்பிக்க விரிவான முன்தயாரிப்பு பணிகள் தற்போது தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

 

 

The Pride of Bharath Sathrapathi Sivaji Maharaj movie characters

 

 

Related articles