இயக்குனர் தமிழ் வாழ்க்கை சம்பவம்..; தமிழ் (உடல் மொழி)யாகவே மாறிய விக்ரம் பிரபு

இயக்குனர் தமிழ் வாழ்க்கை சம்பவம்..; தமிழ் (உடல் மொழி)யாகவே மாறிய விக்ரம் பிரபு

இயக்குனர் தமிழ் வாழ்க்கை சம்பவம்..; தமிழ் (உடல் மொழி)யாகவே மாறிய விக்ரம் பிரபு

 

கிறிஸ்துமஸ் பண்டிகை வெளியீடாக வரும் டிசம்பர் 25 ஆம் தேதி வெளியாக இருக்கும் படம் ‘சிறை’. சுரேஷ் ராஜகுமாரி என்பவர் இயக்கிய இந்த படத்தில் விக்ரம் பிரபு போலீஸ் கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். இது அவர் நடிக்கும் 4வது போலீஸ் வேடம்..

ஆனாலும், ஒவ்வொரு வேடத்திற்கும் நடிப்பு மற்றும் உடல் மொழி மூலம் வித்தியாசத்தை காட்டி நடிப்பதால் அவர் எத்தனை முறை போலீஸாக நடித்தாலும், அது புதிதாகவே இருக்கிறது. அந்த வகையில், ‘சிறை’ படத்தில் புதுவிதமான போலீஸ் விக்ரம் பிரபுவை பார்க்கலாம்..

உண்மை சம்பவத்தை மையமாக கொண்டு உருவாகியுள்ள ‘சிறை’ படம் குறித்தும் நடிகர் விக்ரம் பிரபு கூறுகையில்…

“’சிறை’ எனது 25 வது படமாக வெளியாவது மகிழ்ச்சி. உண்மை சம்பவத்தை மையமாக கொண்ட இந்த படத்தில் நான் போலீஸாக நடித்திருந்தாலும், என் தோற்றம் மற்றும் நடிப்பில் பெரிய வித்தியாசத்தை பார்ப்பீர்கள்.

 

இயக்குநர் தமிழ் வாழ்க்கையில் நடந்த உண்மை சம்பவத்தை மையமாக கொண்டு தான் இந்த கதையை எழுதியிருக்கிறார். அவர் மீது நம்பிக்கை வைத்து தான் இந்த படத்தில் நடித்தேன், அவர் சொன்னது போலவே படம் நன்றாக வந்திருக்கிறது..

இயக்குநர் சுரேஷ், தமிழை விட சீனியர். இயக்குநர் வெற்றிமாறனிடம் நீண்ட வருடங்களாக இணை இயக்குநராக பணியாற்றியவர், அவரது அனுபவம் இந்த கதையை மிக நேர்த்தியாக கையாள வைத்திருக்கிறது.

படத்தின் தயாரிப்பாளர் எஸ்.எஸ்.லலித குமார் மகன் எல்.கே.அக்‌ஷய் குமார், நன்றாக நடித்திருக்கிறார். மிக ஆர்வமாக இருக்கிறார், படத்திற்காக அதிகமாக உழைத்திருக்கிறார். சில அனுபவங்களை அவர் என்னிடம் பகிர்ந்துக் கொண்ட போது, இதை விட அதிகமாக நான் கஷ்ட்டப்பட்டிருக்கிறேன்.” என்றார்..

’சிறை’ படத்தில் பேசப்பட்டிருக்கும் அரசியலை உணர்ந்து நடித்தீர்களா ? அல்லது இயக்குநர் சொன்னதை மட்டும் செய்தீர்களா ? என்ற கேள்விக்கு பதில் அளித்த விக்ரம் பிரபு, “இயக்குநர் தமிழ் வாழ்க்கையில் நடந்த சம்பவம் என்பதால், என் கதாபாத்திரத்தை சொன்ன போது, நான் தமிழின் உடல் மொழியை தான் பின்பற்றினேன்..

அவரிடம் இருந்து இந்த கதாபாத்திரத்திற்காக சில விசயங்களை எடுத்துக் கொண்டேன், அதை வைத்து இயக்குநர் சொன்னதை வைத்து நடித்திருக்கிறேன். நிச்சயம் இந்த கதாபாத்திரம் எனக்கும், ரசிகர்களுக்கும் புதிதாக இருக்கும்.” என்றார்.

தொடர்ந்து வெவ்வேறு கதைக்களங்களில் நடிப்பது ஏன் ?, என்ற கேள்வி “கிரைம் திரில்லர் படங்களில் தொடர்ந்து நடித்தால், இப்படியே நடிப்பது ஏன் ? என்ற கேள்வி வருகிறது, அதை மாற்றினால், அது உங்களுக்கு நன்றாக இருக்குமே, என்று சொல்கிறார்கள். ஆனால், என்னை பொறுத்தவரை எல்லாவிதமான கதாபாத்திரங்களிலும் நடிக்க வேண்டும்.

அனைத்து கதைக்களங்களிலும் நடிக்க வேண்டும். காரணம், அனைத்தும் நடிப்பு தான், அனைத்தும் கதாபாத்திரங்கள் தான். அதனால், நான் வெவ்வேறு ஜானர்களில் நடிக்க வேண்டும் என்று விரும்புவதோடு, வித்தியாசமான கதைக்களங்களில் தொடர்ந்து நடிக்க வேண்டும், என்று முடிவு செய்துவிட்டேன்.” என்றார்..

 

Sirai movie is based on True incident of Director Tamil