கவிஞர் VJP ரகுபதி வரிகளில் அம்மன் பாட்டு..; புதுக்கோட்டை மாமன்னர் பெற்றுக்கொண்டார்
கவிஞர் VJP ரகுபதி வரிகளில் அம்மன் பாட்டு..; புதுக்கோட்டை மாமன்னர் பெற்றுக்கொண்டார்
“கவிஞர் வி.ஜே.பி ரகுபதி அவர்களின் வரிகளில் உருவான அம்மன் பாடல்”
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் வட்டம் எழில் கொஞ்சும்
பசுமை நிறைந்த வரலாற்று சிறப்புமிக்க ஊரான பேத்துப்பாறை ஸ்ரீ மகா மாரியம்மன் திருக்குடமுழுக்கு விழா அண்மையில் வெகு சிறப்பாக நடைபெற்றது.
விழாவில் கோவை மாவட்ட தொழிலதிபர் தமிழரசன் மகாலட்சுமி கலந்து கொண்டனர்..
கவிஞர் வி.ஜே.பி ரகுபதி அவர்கள் தான் எழுதிய பேத்துப்பாறை மாரியம்மன் பாடலை பேத்துப்பாறை மகேந்திரன் மற்றும் கோவில் நிர்வாகிகள் மேலும் ஊர் பொதுமக்கள் முன்னிலையில் பாடலின் இசைக்கோப்பை வெளியிட அதை புதுக் கோட்டை மாமன்னர் மகாஸ்ரீ இராஜகோபால தொண்டைமான் மற்றும் மகாராணி சாருபாலா தொண்டைமான் அவர்கள் பெற்றுக் கொண்டார்..

வரிகள்: கவிஞர் வி.ஜே.பி ரகுபதி
இசை:ரசாந் அர்வின்
குரல்: ராதிகா
ஒளிப்பதிவு: R.V சிலம்பரசன்
படத் தொகுப்பு: கார்னியா ஸ்டுடியோ
இப் பாடல் விரைவில் இணையதளத்தில் உலா வர இருக்கிறது..
Lyricist VJP Ragupathi wrote Amman Song

