நிவின் பாலி ஒரு நிரபராதி.. கோர்ட்டு தீர்ப்பால் ‘பிரேமம்’ மோடில் ரசிகர்கள்
நிவின் பாலி ஒரு நிரபராதி.. கோர்ட்டு தீர்ப்பால் ‘பிரேமம்’ மோடில் ரசிகர்கள்
மலையாளத்தில் மிகவும் பிரபலமான நடிகர் நிவின்பாலி.. இவர் தமிழிலும் ஓரிரு படங்களில் நடித்துள்ளார்.. நேரம் மற்றும் பிரேமம் படங்கள் இவருக்கு தமிழ் ரசிகர்கள் மத்தியில் பெரிய புகழை கொடுத்தது.
இந்த நிலையில் நடிகர் நிவின் பாலி மீது ஒரு பெண் ஒரு குற்றச்சாட்டை சுமத்தியிருந்தார்.. இவ்வழக்கை விசாரித்த நீதிபதிகள், நிவின் பாலி மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகள் பொய்யானதென்றும் அவர் நிரபராதியென்றும் தீர்ப்பளித்துள்ளனர்.
நடிகர் நிவின் பாலி மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகள் மீதான விசாரணையில், சம்பவம் நடந்த தேதி மற்றும் நேரத்தில் அவர் குறிப்பிட்ட இடத்தில் இல்லை என்பது உறுதியாகத் தெரியவந்தது..
இதனையடுத்து, இந்த வழக்கில் 6வது குற்றவாளியாக சேர்க்கப்பட்ட நிவின் பாலி அனைத்து குற்றச்சாட்டுகளில் இருந்தும் முறையாக விடுவிக்கப்பட்டுள்ளார். கொத்தமங்கலம் டி.ஒய்.எஸ்.பி முதல் வகுப்பு மாஜிஸ்திரேட் கோர்ட்டில் தாக்கல் செய்த அறிக்கையில் இந்த தீர்மானம் மிக நுணுக்கமாக விவரிக்கப்பட்டுள்ளது..
Actor Nivin Pauly court case judgement

