ஐயப்ப பக்தர்களுக்கு ஆபத்து.; ஆடிப் பாடிய குழந்தை லக்ஷனா ரிஷி
ஐயப்ப பக்தர்களுக்கு ஆபத்து.; ஆடிப் பாடிய குழந்தை லக்ஷனா ரிஷி
சுவாமி ஐயப்பன் படத்திற்காக திரைக்கலைஞர்களுடன் ஆடிப்பாடிய குழந்தை நட்சத்திரம் லக் ஷனா ரிஷி.
——————————————
அப்பா மீடியாவின் எங்க அப்பா இசை ஆல்பத்தின் வெற்றியைத் தொடர்ந்து “சுவாமி சரணம் பாடுவோம்” என்ற இரண்டாவது இசை ஆல்பம் லக்ஷனா ரிஷி பல கலைஞர்களுடன் இணைந்து “கார்த்திகையில் மாலையிட்டு சரணம் பாடுவோம்
சுவாமி சரணம் பாடுவோம்
நெய்விளக்கு தீபமிட்டு சரணம் பாடுவோம்” என்று ஆடிப்பாடிநடித்திருக்கும் பாடல் காட்சியை கேரளாவின் மலைப்பகுதிகளில் உள்ள புல்லுமேடு. வாகமன், பசுப்பாறை, மேரி குளம், பருந்தும் பாறை மற்றும் ஐயப்பன் கோவிலைச் சுற்றியுள்ள பகுதிகளில் படமாக்கினார்கள்.
இதில் கருப்பு உடை அணிந்து குழந்தை நட்சத்திரம் லக்ஷணா ரிஷியுடன் இணைந்து ஆடிப்பாடிய கலைஞர்கள் பாவா லட்சுமணன், காதல் சுகுமார், கொட்டாச்சி. ஆன்ந்த் செல்வராஜ், செந்தூர்பாண்டியன், சாரப் பாம்பு சுப்புராஜ், காதல் சரவணன், ராஜாஜிராஜன், சித்ரகுப்தன். தெனாலி சாமி.சங்கர், சிவலிங்கம், மற்றும் பலர் கருப்பு உடை அணிந்து ஆடிப்பாடி நடித்திருக்கிறார்கள்.
இந்த பாடல் காட்சி ‘கால் கொலுசு’ படத்தை இயக்கிய டைரக்டர் எஸ்.வி.ரிஷி இயக்கிக் கொண்டிருக்கும் சுவாமி ஐயப்பன் வாழ்க்கை வரலாற்றுப் படத்தில் இந்த ஆல்பம் பாடல் இடம் பெறுகிறது.
கதைப்படி மாலைப் போட்டுக்கொண்ட ஐயப்ப பக்தர்கள் சபரிமலைக்கு செல்வதும் அதனால் ஏற்படும் ஆபத்துகளும், பிரச்சனைகளும் அதிலிருந்து எப்படி தப்பித்து ஐயப்பனின் ஆசியோடு ஐயனைதரிசனம் செய்கிறார்கள் என்பதை விளக்கும் பாடல் காட்சி தான் இது.
ஒளிப்பதிவு: ரெஜி, இசை – சந்தோஷ் சாய், எடிட்டிங்: பிரகாஷ் மப்பு ,
தயாரிப்பு மேற்பார்வை: சைமன் நெல்சன்
மக்கள் தொடர்பு..பெருதுளசி பழனிவேல்
தயாரிப்பு: அனீஷா சதீஷ்
எழுத்து இயக்கம் : எஸ்.வி.ரிஷி.
Child Artist Lakshna Rishi in Ayappa Swami Song


