தவறான வழிகாட்டுதலுக்குள்  தணிக்கைத்துறை..; ‘ஜனநாயகன் & பராசக்தி’ குறித்து ரஞ்சித் அறிக்கை

தவறான வழிகாட்டுதலுக்குள்  தணிக்கைத்துறை..; ‘ஜனநாயகன் & பராசக்தி’ குறித்து ரஞ்சித் அறிக்கை

தவறான வழிகாட்டுதலுக்குள்  தணிக்கைத்துறை..; ‘ஜனநாயகன் & பராசக்தி’ குறித்து ரஞ்சித் அறிக்கை

 

இயக்குநர் பா.இரஞ்சித் அறிக்கை

 

 

ஜனநாயகன் திரைப்படத்தின் தணிக்கை விவகாரத்தில் மத்திய திரைப்படத் தணிக்கைத்துறையின் செயல்பாடு மிகவும் மோசமானது. தனிப்பட்ட அரசியல் காழ்ப்புணர்ச்சியின் காரணமாக நடந்திருப்பதற்கான சாத்தியக்கூறுகள் அப்பட்டமாகவே தெரிகிறது.

அதே போல, ‘பராசக்தி’ திரைப்படத்திற்கு கொடுக்கப்பட்ட நெருக்கடிகள் போன்றே, என் இயக்கத்தில் வெளிவந்த திரைப்படங்களுக்கும், நீலம் தயாரிப்பில் வெளிவந்த திரைப்படங்களுக்கும் கொடுக்கப்பட்டதை பலமுறை பகிர்ந்திருக்கிறேன். ஆனால், ஜனநாயகன் படத்திற்கு நிகழ்ந்திருப்பதென்பது, தணிக்கைத்துறை தவறான வழிகாட்டுதலுக்குள் சிக்கியிருப்பதைக் காட்டுகிறது.

மேலும், மாற்றுக்குரல்கள் வராமல் தடுப்பதற்கான வேலையை மிகத்தீவிரமாகக் கடைபிடிக்கின்ற இது போன்ற மோசமான போக்கை வன்மையாகக் கண்டிக்க வேண்டும். படைப்புச்சுதந்திரம் பாதுகாக்கவும், வரும் காலங்களில் மத்திய தணிக்கைத்துறை சுதந்திரமாக செயல்படவும் குரலெழுப்புவோம்.

– இயக்குநர் பா.இரஞ்சித்

 

Director Ranjith condemns Censor board in Jana Nayagan and Parasakthi issue

 

 

Related articles