கருப்பசாமி பாட்டு என் அசிஸ்டன்ட் சொன்னாரு.. இப்படியொரு ரெஸ்பான்ஸ் எதிர்பார்க்கல.. – சூர்யா
கருப்பசாமி பாட்டு என் அசிஸ்டன்ட் சொன்னாரு.. இப்படியொரு ரெஸ்பான்ஸ் எதிர்பார்க்கல.. – சூர்யா
சூர்யா, த்ரிஷா, ஆர்ஜே பாலாஜி, நட்டி தீபா, உள்ளிட்டோர் நடிப்பில் வெளியான திரைப்படம் ‘கருப்பு’. ஆர் ஜே பாலாஜி இயக்கிய இந்த படத்திற்கு சாய் அபயங்கர் இசையமைக்க ட்ரீம் வாரியர்ஸ் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்திருந்தது.
இந்த படம் கடந்த மே மாதம் 15ஆம் தேதி வெளியானது..
இப்படம் உலகம் முழுவதும் இதுவரை ரூ.207 கோடிக்கும் அதிகமாக வசூலித்துள்ளது. தமிழகத்தில் மட்டும் 100 கோடிக்கு மேல் வசூலித்துள்ளது..
இப்படம் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருப்பதை அடுத்து, செய்தியாளர்களைச் சந்தித்தார் நடிகர் சூர்யா.
அப்போது அவர் பேசும்போது…: ‘கருப்பு’ படத்தை அரை மணி நேரத்தில் முடிவு பண்ணினேன், இதில் நடிக்கலாம் என்று. வேறு எந்தப் படத்தையும் இவ்வளவு விரைவாக முடிவு பண்ணியதில்லை.
ஆர்ஜே பாலாஜி கதை சொல்லும்போது, தியேட்டரில் வேறு மாதிரி இருக்கும் என்ற நம்பிக்கை இருந்தது.

இது ஆசைப்பட்ட வெற்றி. ஆனால், எதிர்பார்க்காத பெரிய வெற்றியைக் கொடுத்த ரசிகர்களுக்கு நன்றி.
இது மாதிரியான ரியாக்ஷனை தியேட்டரில் சமீபத்தில் பார்த்ததே இல்லை. கடவுளின் அருள் இந்தப் படத்தில் இருக்கிறது என்பதை உணர்கிறோம்.
தமிழ்நாடு மட்டுமின்றி, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, துபாய் என எங்கும் இதே ரியாக் ஷன் கிடைக்கிறது என்பதை நினைக்கும்போது இந்தத் தொழில் பண்ணுவது பிடித்திருக்கிறது என்று மறுபடியும் சொல்லத் தோன்றுகிறது.
எல்லாம் படத்துக்கும் விமர்சனம் இருக்கும், இதை இப்படிப் பண்ணியிருக்கலாம், அப்படி பண்ணியிருக்கலாம் என்று. ஆனால் எல்லோரிடம் இருந்தும் ஒரே மாதிரியான அன்பையும் அவர்களுக்கு சந்தோஷத்தையும் ஒரு படம் கொடுக்கிறது என்றால் அதற்காக நான் நன்றி சொல்ல வேண்டும்.

என்னுடன் 27 வருடமாக உதவியாளராக இருக்கும் குமார் சொன்ன ஒரு விஷயம், படத்தைத் தாண்டி கருப்பசாமிக்கு ஒரு பாடல் வைக்க வேண்டும் என்பது.
குமாரின் ஐடியாதான் அந்த கிளைமாக்ஸ் பாடல். எடிட் செய்து முடித்த பிறகு 5 மாதத்துக்குப் பிறகு எடுத்ததுதான், அப்பாடல். படத்துக்கு இனி செலவு பண்ண வேண்டாம், இனி முடியாது என்று நினைத்து
அந்த ஐடியாவை முடித்திருக்கலாம்.
ஆனால், எடுத்துவிடலாம் என முடிவு செய்து அப்பாடலை ஷூட் செய்தோம். அதற்காக அதற்காக தயாரிப்பாளர்களுக்கு நன்றி.. அதைத்தான் இப்போது ரசிகர்கள் பாராட்டுகிறார்கள்.
குழந்தைகளில் இருந்து பெரியவர்கள் வரை தியேட்டர்களில் அத்தனை பேரும் படத்தை ரசிக்கிறார்கள்.. மீடியா மக்களுக்கு நன்றி”
இவ்வாறு நடிகர் சூர்யா கூறினார்.
தயாரிப்பாளர்கள் எஸ்.ஆர்.பிரபு, பிரகாஷ் பாபு, 2 டி என்டர்டெயின் மென்ட் நிறுவனத்தின் ராஜ சேகர பாண்டியன் மற்றும் பிஆர்ஓ சதீஷ் & சக்தி ஃபிலிம் ஃபேக்டரி சக்தி வேலன் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்..
Suriya and team happy with Karuppu success

